அமெரிக்க பெடரல் ரிசர்வ் மற்றும் ஜப்பான் மத்திய வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தின் எதிரொலியாகச் சர்வதேச பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையில் மும்பை பங்குச்சந்தை 130 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 111.30 புள்ளிகள் சரிந்து 28,523.20 புள்ளிகள் எட்டியது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் 32.50 புள்ளிகள் சரிந்து 8,775.90 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஒஎன்ஜிசி, டாடா ஸ்டீல், சிப்லா, மாருதி, பலர் கிரிட், லுப்பின், ஏசியன் பெயின்ட், கோல் இந்தியா, டிசிஎஸ், டாக்டர் ரெட்டி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய 11 நிறுவனங்கள் மட்டுமே லாபத்தை அடைந்துள்ளது.