சென்னை: அதானி குழுமத்தின் கீழ் இயங்கி வரும் அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனம் மூலமாக உலகின் மிகப் பெரிய 678 மெகா வாட்ஸ் உற்பத்தி செய்யக் கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தைத் தமிழகத்தில் துவங்க இருப்பதாகக் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் சூரிய மின் உற்பத்தி நிலத்தை 4,550 கோடி செலவில் ராமநாதபுரத்தில் உள்ள கமுதியில் ஒரே இடத்தில் 648 மெகா வாட்ஸ் தயாரிக்க கூடிய நிலையமாக அமைக்க இருப்பது இன்னொரு சிறப்பு.
இந்த மிகப் பெரிய 648 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யக் கூடிய ஆலையை கமுதியின் 400 கிலோ வாட்ஸ் சப் ஸ்டேஷன் இணைத்து உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ் நாட்டில் இந்த மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதில் மிகவும் பெருமை படுகின்றோம் என்றும் இதனால் உலகின் தலை சிறந்த க்ரீன் எனர்ஜி தயாரிக்கும் நிறுவனமாக அதானி குழுமம் பெயர் பெறும் என்றும் கவுதம் அதானி தெரிவித்தார்.
இதற்காக எங்களது மிகப்பெரிய நன்றியை தமிழக முதல்வருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் அதானி கூறினார்.
10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..!