சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவையின் சின்ன மலை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான ரயில் பாதையை தமிழக முதல்வர் ஜே ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.
அதுமட்டும் இல்லாமல் 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை இருக்கலாம் என்று கருதப்பட்ட டிக்கெட் கட்டணம் அதிகபட்சமாக 50 ரூபாயாக நிர்னைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக 10 ரூபாயும் அதுவே 20 ரூபாய், 30 ரூபாய் என அதிகரித்து 50 ரூபாய் வரை பயணக் கட்டணமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் டாக்ஸி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும் கோயம்பேடில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலான 16 கிலோ மீட்டரை பேருந்துகளில் செல்லும் போது 20 ரூபாயில் 1:30 மணி நேரத்தில் சென்று அடையாளம், டாக்ஸிகளில் குறைந்தது 167 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை ஆகும். ஆனால் மெட்ரோ மூலம் 50 ரூபாயில் எந்தப் போக்குவரத்து நெற்றுக்கடியும் இல்லாமல் அரை மணி நேரத்தில் சென்று வர இயலும். இப்போது துவங்கப்பட்டுள்ள மெட்ரோ பாதையின் மூலம் முதல் கட்டமாக அறிவித்த மெட்ரோ பாதையில் 19 கிமீ வரை மக்கள் பயணம் செய்ய இயலும் என்றும் இதன் மூலம் ஒரு நாளுக்கு 3 லட்சம் பயணிகள் வரை சென்று வர இயலும் என்றும் கூறப்படுகிறது. கோயம்பேடு முதல் சென்னை விமான நிலையம் வரையிலான இத்திட்டத்திற்குத் தமிழக அரசு 400 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவில் மொத்தமாக 324 கிலோ மீட்டர்கள் வரை மக்கள் பயண செய்யக் கூடிய மெட்ரோ ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. டிக்கெட் கட்டணம்
டாக்ஸி நிறுவனங்கள்
3 லட்சம் பயணிகள்
400 கோடி முதலீடு