டெல்லி: பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்கலது வாடிக்கையாளர்களிடம் கணக்கு துவங்கிய போது சரியான மற்றும் ஏதேனும் அடையாள முகவரி சான்றிதழ்கள் அளிக்காமல் இருந்தால் அக்டோபர் மாதத்திற்குள் அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
ஒரு வேலை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கிற்கான அடையாள முகவரி சான்றிதழ்களை அக்டோபர் 1-க்கு முன்பு அளிக்கத் தவறினால் ஏடிம் முதல் இணையதள வங்கி செவை, மொபைல் பேங்க்கிங் என அனைத்துச் சேவையையும் இடக்கால நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதல்களின் படி வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களைச் சரியாக புதுப்பித்துக் கொள்வது வங்கிகளுக்குக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் படி பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களை அடையாள முகவரி சான்றிதழ்களை அருகில் உள்ள தங்களது வங்கி கிளைகளில் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது. நடப்பு கணக்கை வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்கலது பழைய மற்றும் புதிய முகரிகளுக்கான சான்றிதழ் மற்றும் சொத்துக்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். வாடிக்கையாளர்களின் விவரங்களை புதுப்பிப்பதன் மூலம் வங்கி சேவையை தவறான முறையில் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் என்று வங்கி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.ஏடிம் முதல் இணையதள வங்கி செவை வரை
புதுப்பித்தல்
நடப்பு கணக்கு
எதற்காக