மும்பை: வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு ஆசிய சந்தையின் மந்தமான வர்த்தகத்தின் மூலம் கணிசமான உயர்வை எட்டிய நிலையில் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சரிவை தழுவியது.
திங்கட்கிழமை வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் குறியீடு 14 வாரச் சரிவையும், நிஃப்டி குறியீடு 10 வாரச் சரிவையும் எட்டி முதலீட்டாளர்களுக்குக் கவலையை அளித்தது.
காலை 11.50 வரை நிலையான வர்த்தகத்தைப் பெற்று லாபத்தில் வர்த்தகம் செய்து வந்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய வர்த்தகத் துவக்கத்தில் சரிவைடைந்தது. இவ்வார இறுதியில் ஐரோப்பிய மத்திய வங்கி வெளியிட உள்ள வருவாய் மற்றும் வர்த்தக முடிவுகள் முதலீட்டாளர்களை எச்சரித்துள்ளது. இதனால் ஐரோப்பிய சந்தையில் அதிகளவிலான வர்த்தகச் சரிவு ஏற்பட்டது.
இதன் எதிரொலியை ஆசிய சந்தையிலும் பாதித்ததால் சீனா மற்றும் இந்திய சந்தைகள் அதிகளவில் பாதித்தது. இதனால் மதிய நேரத்தில் மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சரிவை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது.
3.30 மணிக்கு முடிந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 143.63 புள்ளிகள் சரிந்து 27,529.97 புள்ளிகள் எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று மதிய நேர வர்த்தகத்தில் 63 புள்ளிகள் சரிவுடன் 8,520.40 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.