மும்பை: 2016-17ஆம் நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் இந்தியாவின் முக்கியத் துறைமுகத்தில் கார்கோ வர்த்தகம் 5.1 சதவீதம் உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் 315.4 மில்லியன் டன் சரக்கு வர்த்தகத்தம் செய்யப்பட்டுள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் அளவு 299.5 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கோவா முர்மோகோவ் துறைமுகத்தில் மட்டும் வர்த்தகம் சுமார் 61 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பரதீப் துறைமுகத்தில் 18.3 சதவீத உயர்வும், விசாகப்பட்டினம் 11 சதவீதம், கொச்சி 5.2 சதவீதம், வி.வோ.சிதம்பரநார் 3.5 சதவீதம், புதிய மங்களுரூ 3.4 சதவீதம், சென்னை துறைமுகத்தில் 0.3 சதவீதம் அளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது.
கடந்த 2 வருடமாக இந்தியாவில் கார்கோ வர்த்தகம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Kandla துறைமுகத்தில் மட்டும் இக்காலகட்டத்தில் சுமார் 53.9 பில்லியன் டன் சரக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 17.1 சதவீதம் அதிகமாகும்.