மும்பை: பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து கடந்த இரண்டு வருடங்களாக 15 பங்குகள் 24 சதவீதம் லாபத்தை அளித்துள்ளன. இது வங்கியில் உள்ள நிரந்தர வைப்பு நிதி கணக்குகளை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
மே 2014 முதல்
நிப்டி க்ரோத் 15 மற்றும் என்எஸ்ஈ டிராக்கிங் 15 தரவுகளின் படி மே 2014 முதல் 24.4 சதவீதம் வரை சில துறை சார்ந்த பங்குகள் மட்டும் லாபம் அளித்துள்ளன.
இதே மே மாதம் தான் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவிக்கு வந்தது. இந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் நல்ல லாபத்தை அளித்துள்ளன.
அது மட்டும் இல்லாமல் சில நுகர்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஆடோமொபைல் நிறுவனங்களின் பங்குகள் அடுத்த நிலையில் உள்ளன.
ஈச்சர் மோடார்ஸ்
ஈச்சர் மோடார்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 2014,மே 22 ஆம் தேதி 7,305 ரூபாயாக இருந்தது இதுவே இப்போது 25,800 ரூபாயாக 253 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது.
153 முதல் 53 சதவீதம் வரை உயர்ந்த பங்குகள்
மாருதி சூஸிகி நிறுவன பங்குகள் 153 சதவீதமும், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் 126 சதவீதமும், லூபின் நிறுவனப் பங்குகள் 60 சதவீதமும், எச்யூஎல் நிறுவனப் பங்குகள் 53 சதவீதமும் இதே காலகட்டத்தில் உயர்ந்துள்ளன.
ஐடி நிறுவனங்கள்
2014 மே மாதத்துடன் ஒப்பிடும் போது விப்ரோ நிறுவனம் அப்போது இருந்ததை விட 1 சதவீதம் விலை குறைந்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை இந்த 31 மாதத்தில் மட்டும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் இன்ஃபோஸிஸ் நிறுவனங்கள் முறையே 22 மற்றும் 35 சதவீதம் உயர்ந்துள்ளன.
நுகர்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஐடிசி நிறுவனத்தின் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.