மும்பை: வங்கியல்லாத நிதி நிறுவனமான ரெலிகேர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புவதால் ரெலிகேர் குழும நிறுவனங்களில் ஒன்றான ரெலிகேர் பின்வெஸ்ட் நிறுவனத்தை 6,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இந்நிறுவனத்தின் நிறுவனர்களான மல்விந்தர் சிங் மற்றும் ஷிவிந்தர் சிங் ஆகியோர் முதலீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ரெலிகேர் குழுமங்களில் ஒன்றான பங்குச்சந்தை வர்த்தகம் செய்யும் ரெலிகேர் எண்டர்பிரைசர்ஸ் கடந்த வரும் வரும் பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்ட போது குறைந்த அளவிலான வரவேற்பு மட்டுமே கிடைத்தது.
இதனால் தனது கிளை நிறுவனங்கள் மற்றும் அதிகம் வருவாய் அளிக்காத பிரிவுகளை விற்பனை செய்யும் பணியில் இறங்கியது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்கப் பண்ட் மேனேஜ்மெண்ட் வர்த்தகம் மற்றும் லைப் இன்சூரன்ஸ் கூட்டணிகளை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மொத்த வருவாயில் 55 சதவீத வருவாய் அளிக்கும் பின்வென்ஸ் நிறுவனம் ரெலிகேர் எண்டர்பிரைசர்ஸ்-இன் 99.99% கிளை நிறுவனமாகும். ஆனால் இதுகுறித்த எவ்விதமான தகவல்களும் அளிக்க ரெலிகேர் எண்டர்பிரைசர்ஸ் மறுத்துள்ளது.
தற்போதைய நிலையில் இவ்வர்த்தகக் குழுமத்தின் மொத்த மதிப்பு 2,700 முதல் 2,900 கோடி ரூபாய் அளவில் சந்தையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பின்வெஸ்ட் நிறுவனம் 6,000 கோடி ரூபாய் அளவிலும், NBFC தளம் 18,000 கோடி ரூபாய் அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது.