சியோல்: ஹூண்டாய் மோட்டார் குழுமம் தென் கொரியாவில் உள்ள தனது நிறுவனத்தின் நிர்வாகிகள் ஊதியங்களில் 10 சதவீதத்தை வரும் மாதம் முதல் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தச் சம்பள குறைப்பு நடவடிக்கை முறையான விவரங்கள் எதையும் உறுதி செய்யாமல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இது குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
மேலும் இந்தச் சம்பள குறைப்பிற்கான காரணம் எதிர்பார்த்த அளவு விற்பனை நடக்க வில்லை என்றும், சென்ற மாதம் நல்ல முன்னேற்ற இருந்த போதிலும் விற்பனை குறைவாக உள்ளது என்பதே என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: