மும்பை: புதன்கிழமையான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கிட்டத்தட்ட ஒரு சதவீத சரிவைச் சந்தித்தது. ஆக்ஸிஸ் வங்கிடின் பங்குகள் அதிகபட்சமாக 8.04 சதவீதம் சரிந்தது.
மாலை சந்தை மூடப்படும் போது மும்பை பங்குச் சந்தை குறியிடு 251 புள்ளிகள் சரிவுடன் 27,836.51 புள்ளிகளாக முடிவடைந்தது.
அதே நேரம் தேசிய பங்குச் சந்தை 76.05 புள்ளிகள் சரிவுடன் 8,615.25 புள்ளிகளுடன் மூடப்பட்டது.
ஐடியா செல்லுலார் (4.38 %), டிடிகே ப்ரிஸ்டீஜ் (5.23 %), ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்டரக்ச்சர் (5.23%), கட்டி லிமிட்டட் (4.55%), ஜிஎஸ்எப்சி (4.29%) பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
ஆக்ஸிஸ் வங்கி (-8.04%), ஜுப்லியன்ட் ஃபூட் வொர்க்ஸ் (-7.45%), கிரெடிட் அனலிஸிஸ் (-5.85%), காடிலா ஹெல்த்கேர் (-4.61%), ஜேஎஸ்டபள்யூ (-4.36%) பங்குகள் சரிவை சந்தித்தன.
உலகளவில் பங்குச் சந்தைகள் மந்தமான நிலையிலும், ஆசிய சந்தை சரிந்தும் இன்று காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.