டெல்லி: மகனுக்குத் திருமணம் செய்யப்பட்டு இருந்தாலும் தனது பெற்றோரின் பெயரில் உள்ள வீட்டிற்குச் சட்ட பூர்வமாக எந்த உரிமையும் இல்லை என்றும் கருனையின் பெயரில் தங்கிக்கொள்ளலாம் என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெற்றோர்கள் அனுமதித்தால் தங்களது மகன் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் தங்கலாம். அதற்காகச் சுமைதாங்கியாக தங்க வைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
டெல்லியில் தங்களது வீட்டில் தங்கி இருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி நடந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட வழக்கு உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த பிரதிபா ராணி என்கின்ற நீதிபதி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து பெற்றோருக்கு சாதகமாகத் தீர்ப்பை வழங்கி உள்ளார்.
மூத்த குடிமக்களான இருவரும் இந்த வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் கூறும் போது தங்களது இரண்டு மகன்கள் மற்றும் மருமகள்கள் தங்களது வாழ்க்கையை நரகமாக மாற்றிவிட்டனர் என்று கூறியதுடன் 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் அளித்த புகார் மற்றும் நோட்டிஸ்களையும் சமர்ப்பித்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தனது மகன்கள் மற்றும் மருமகள்கள் ஆகியோர் நாங்களும் இந்த வீட்டின் இனை உரிமையாளர்கள் என்று வாதிடினர். ஆனால் சொத்தின் பத்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
இதன் படி ஒரு மகன் மற்றும் மருமகள் இருவரும் தாங்களும் உரிமையாளர்கள் என்பதை நிரூபிக்கத் தவறியதை அடுத்து நீதிமதி ராணி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.