செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் பதவி விலகியதை அடுத்து புதிய கவர்னராக செப்டம்பர் 5 முதல் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார்.
இப்போது புதிதாக பதவி ஏற்று உள்ள ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலின் சம்பளம் எவ்வளவு என்று ஆர்டிஐ மூலம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது.
2 லட்சம்
இதற்குப் பதில் அளித்துள்ள ஆர்பிஐ இவருடைய சம்பளம் 2 லட்சம் என்றும் உதவி பணியாளர்கள் யாரும் இல்லை என்று பதில் அளித்துள்ளது.
முழு மாத சம்பளம்
அக்டோபர் மாதம் முதல் தனது முழு சம்பளத்தை வாங்கத் துவங்கிய உர்ஜித் படேல் 2.09 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். இவருடைய சம்பளமும், ரகுராம் ராஜன் ஆகஸ்ட் மாதம் வாங்கிய சம்பளமும் ஒன்றே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரகுராம் ராஜன்
மேலும் ரகுராம் ராஜன் செப்டம்பர் மாதம் வேலை செய்த நான்கு நாட்களுக்கு ஊதியமாக 27,933 ரூபாயாயும் பெற்றுள்ளார்.
ரகுராம் ராஜன் 2013 செப்டம்பர் 5 ஆம் தேதி ஆர்பிஐ கவர்னராக பதவி ஏற்ற போது 1.69 லட்சம் சம்பளமாக பெற்றார். பின்னர் 2014 ஆம் ஆண்டு 1.78 லட்சமும், 2015 ஆண்டு 1.87 லட்சமும் சம்பளமாக பெற்றுள்ளார். இவருடைய சம்பளம் 2016 ஜனவரி 2.04 லட்சத்தில் இருந்து 2.09 லட்சமாக உயர்த்தப்பட்டது.
கார்
இவை மட்டும் இல்லாமல் உர்ஜித் படேலுக்கு இரண்டு கார்களும் இரண்டு ஓட்டுநர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ரகுராம் ராஜனுக்கு 4 கார்கள், 4 ஓட்டுநர்கள், ஒரு கார் பராமிரிப்பாளர் வழங்கப்பட்டது.