300 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை பெற்றது இந்திய சந்தை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசின் திட்டங்கள் மூலம் இந்தியாவில் வர்த்தகச் சந்தை விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ள நிலையில், இந்திய சந்தை தற்போது சிறப்பான முதலீட்டுச் சந்தையாக உருவெடுத்துள்ளது.

 

ஏப்ரல் 2000 மற்றும் செப்டம்பர் 2016ஆம் ஆண்டுக்கு மத்தியில் 300 பில்லியன் டாலருக்கும் அதிகமான அன்னிய முதலீடு இந்திய சந்தையில் குவிந்துள்ளது.

 
300 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை பெற்றது இந்திய சந்தை..!

இதில் 33 சதவீதம் மொரிஷியஸ் நாட்டின் வாயிலாக இந்திய சந்தைக்கு வந்துள்ளது. முதலீட்டாளர்கள் மொரிஷியஸ் நாட்டின் மூலம் அன்னிய முதலீடு செய்யும் போது இரட்டை வரி விதிப்பில் இருந்து சலுகை பெற முடியும்.

ஏப்ரல் 2000 முதல் செப்டம்பர் 2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியா மொரிஷியஸ் நாட்டின் வாயிலாகச் சுமார் 101.76 பில்லியன் டாலர் குவிந்துள்ளது. மேலும் இக்காலகட்டத்தில் மொத்த அன்னிய முதலீட்டின் அளவு 310.26 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

300 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை பெற்றது இந்திய சந்தை..!

மொரிஷியஸ் நாட்டைத் தொடர்ந்து சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அதிகம் முதலீடு செய்தோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

300 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டைப் பெற்றதன் மூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பான முதலீட்டுச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது என் FICCI மற்றும் CII அமைப்புகள் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India takes pride of place, crosses $300 billion FDI milestone

India takes pride of place, crosses $300 billion FDI milestone - Tamil Goodreturns
Story first published: Tuesday, December 6, 2016, 15:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X