இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோருக்கு வரியில் இருந்து விலக்கும், பண பரிமாற்றம் மூலம் பொருட்கள் வாங்குவோருக்கு அபராதமும் விதிக்க வேண்டும் என்று அரசு உயர்மட்ட கொள்கை உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் கட்டணம்
நிதி ஆயோக் ரூபாய் நோட்டுகள் மூலம் செய்யும் பரிவர்த்தனைக்குக் கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து உள்ளதாகவும் ஆனால் அதற்கான விதிகள் ஏதும் இல்லை என்றும் இரண்டு அரசு அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
புதிய விதிகள்
அதற்காக இணையதளம் மூலம் மருந்து பொருட்கள் விற்கும் முறைக்கு விதிகள் தளிர்க்கப்பட்டது போல இதற்கும் புதிய விதிகள் அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மோடியின் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் நவம்பர் 9 ஆம் தேதி முதல் மக்கள் வங்கிகள் முன் வரிசையில் நின்றுகொண்டு பல சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
நோட்டுகள் தட்டுப்பாடு
இந்த பரிந்துரைப்பு ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டை குறைக்க இணையவழி பண பரிவர்த்தனையை மக்கள் மீது திணிக்கும் ஒரு முயற்சியாகவே உள்ளது.
இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் வங்கி கணக்கு உள்ளன அதில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான கோரிக்கையும் செயல்படுத்தப்பட்டே உள்ளது.
தற்போது உள்ள் சிக்கல்கள்
அதே நேரம் 98 சதவீத பண பரிவர்த்தனை ரூபாய் நோட்டுகளாகவே நடைபெறுகின்றது. 11 சதவீத நுகர்வோர் 2015 ஆம் ஆண்டு டெபிட் கார்டுகளை பயன்படுத்தி உள்ளனர். அதே நேரம் பல சில்லறை வணிகர்களிடம் கார்டு பரிவத்தனை முறைகள் இல்லை.
இதனால் கிடங்கு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று குழு முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு விவசாயிகள் கிடங்குகளில் உணவு தானியங்களை வைத்து கடன் வாங்கும் முறை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சலுகைகள்
மேலும் இன்று அருண் ஜேட்லி பத்திரிக்கையாளர் சந்திப்பில் டிஜிட்டல் முறையில் பெட்ரோல் வாங்குபவர்களுக்கு 0.75 சதவீதம் சலுகையும், ரயில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 0.50 சதவீதம் சலுகையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.