500 மற்றும் 1000 ரூபாய்களைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து வங்கியில் ஒரு பக்கம் முதலீடுகள் குவிந்தாலும் மக்கள் இடையே பெறும் சில்லரை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பொருளாதாரத்தின் பல பிரிவுகள் பெறும் பாதிப்பை சந்தித்துள்ளன. எந்தத் துறைகள் எல்லாம் பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று இங்குப் பார்ப்போம்.
இ-காமர்ஸ்
இணையதள விற்பனை தளங்களில் கேஷ்-ஆண்டெலிவரி சேவையைச் செயல்படுத்த முடியாததால் 25 முதல் 30 சதவீதம் விற்பனை பாதித்துள்ளது.
விமான போக்குவரத்து
இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து துறையும் ஒரு மாதமாக மந்த நிலையில் உள்ளது.
மோட்டார் வாகனங்கள்
மோட்டார் வாகனங்கள் வாங்குவது குறைந்துள்ளது. இதிலும் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் வாங்குவது மிகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சுற்றுலாத் துறை
வெளிநாட்டுப் பயணிகளின் சுற்றுலா சீசனாக இருந்த போதிலும் 10 முதல் 15 சதவீதம் வரை விற்பனை பாதித்துள்ளது.
ரியல் எஸ்டேட்
நகரங்களில் ரியல் எஸ்டேட் தொழில் பெறும் சரிவை சந்தித்துள்ளன. நிலங்களின் விலை குறைந்துள்ளன.
ஸ்டீல்
இதுவும் ரியல் எஸ்டேட் துறையினரை நம்பி இருக்கும் ஒரு பிரிவு என்பதால் 30 முதல் 35 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளது.
சில்லறை வர்த்தகம்
மால்கள், பிராண்டட் ஷோரூம்களில் விற்பனை அதிகமானாலும், சிறு கடைகளை நடத்தி வரும் கடைக்காரர்களின் நிலைமை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பொருட்கள்
பெறும் நகரங்களில் மக்கள் கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்தி நுகர்வோர் பொருட்கள் வாங்கினாலும் கிரமங்கள், சிறு நகரங்களில் இத்துறையின் வர்த்தகம் பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
சிமெண்ட்
ரியல் எஸ்டேட் துறையை நம்பி உள்ள இந்த சிமெண்ட் நிறுவனங்கள் 60 முதல் 65 சதவீதம் வரை இந்தச் செல்லா நோட்டுகளால் விற்பனை குறைந்துள்ளதாக கூறுகின்றன.
டைமண்ட்
டைமண்ட் நகைகள் என்ன தான் விலை உயர்வாக இருந்தாலும், விற்பனை குறைந்துள்ளதால் ஊழியர்களுக்கும் சம்பளம் அளிக்க முடியாத நிலை இந்து துறையில் உறுவாகி உள்ளது.