பணம் இல்லா பொருளாதாரத்தை உருவாக்கும் முயற்சியை ரயில்வேவும் எடுத்து வருகின்றது. கார்டு ஸ்வைப் பண்ணும் இயந்திரங்களை பார்சல் புக்கிங் அலுவலகம் மற்றும் பிற டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்கள் போன்றவற்றில் அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே முயற்சி செய்து வருகின்றது.
கார்டு ஸ்வைப் பண்ணும் இயந்திரங்கள் மட்டும் இல்லாமல் பெரும் நகரங்களில் உள்ள டிக்கெட் எடுக்க உதவும் கியாஸ்க் இயந்திரங்களையும் அனைத்து ரயில் நிலையங்களிலும் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா டிக்கெட் கவுண்ட்டர்கள்
இந்தியாவில் மொத்தம் 13,000-க்கும் மேற்பட்ட முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டர்களும், 14,000-க்கும் மேற்பட்ட முன்பதிவு இல்லா டிக்கெட் கவுண்டர்கள் உள்ளன.
பிஓஎஸ் இயந்திரங்களை முன்பதிவு கவுண்டர்களில் நிறுவ வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
0.50 சதவீதம் வரை சலுகை
இதன்மூலம் மாநகர ரயில்களின் கார்டுகளில் 0.50 சதவீதம் வரை சலுகையை 2017 ஜனவரி முதல் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சீசன் டிக்கெட் பயணிகள்
கிட்டத்தட்ட 80 லட்சம் ரயில் பயணிகள் சீசன் டிக்கெட் உபயோகப்படுத்துவதாகவும் அங்கு பெரும்பாலும் பண பரிவர்த்தனையே நடைபெற்று வருகின்றது என்றும் கூறுகின்றனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனை
எவ்வளவு அதிகமாக வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைக்கு மாறுகிறார்களோ அவ்வளவு விரைவில் ஆண்டுக்கும் 1,000 கோடி வரை ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கின்றனர்.
மேலும் சலுகைகளை அளிக்க 10 லட்சத்திற்கான இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் அனைவருக்கும் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை
தினமும் 14 லட்சம் பேர் ரயில் டிக்கெட் புக் செய்வதாகவும் அதில் 58 சதவீதத்தினர் இணையதள முறையைப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது மேலும் 20 சதவீத பயணிகளை அதிகரிக்கும் முயற்சியில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.