நாட்டின் முன்னணி கல்லூரிகளின் ஒன்றான ஐஐடி பாம்பே மாணவர்கள் 2016ஆம் நிதியாண்டுக்கான வளாக நேர்முகத் தேர்வில் 5 வருடத்திற்கு மிகவும் குறைவான வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
2012ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 1ஆம் தேதி துவங்கும் கேம்பஸ் இண்டர்வியூவில் 170 வேலைவாய்ப்புகளை ஐஐடி பாம்பே கல்லூரி மாணவர்கள் பெறுவார்கள், ஆனால் இந்த ஆண்டு வெறும் 150 வேலைவாய்ப்புகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
தற்போது வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளில் மென்பொருள் மற்றும் கோர் துறையில் வேலைவாய்ப்புகளில் எவ்விதமான பாதிப்புமில்லை, ஆனால் நிதியியல் மற்றும் கன்சல்டன்சி பிரிவில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க மென்பொருள் வேலைவாய்ப்பு எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
வழக்கம்போல் மென்பொருள் மற்றும் கோர் துறையில் அளிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களான ஓலா, பேடிஎம், சாவன் ஆகிய நிறுவனங்களின் சம்பள அளவுகளில் எவ்விதமான மாற்றமில்லை.