இந்தியா முழுவதும் வியாழக்கிழமை முதல் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை துவக்கியது ஏர்டெல். ஏர்டெல் நிறுவனத்தின் மெண்ட்ஸ் வங்கி சேவை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி துவக்கி வைத்தார்.
சேமிப்பு கணக்கு
3000 கோடி ரூபாய் இதற்கான முதலீடு செய்துள்ள ஏர்டெல் நிறுவனம் சேமிப்பு கணக்குகளுக்கு 7.25 சதவீதம் வட்டியை அளிக்கின்றது.
மத்திய வங்கி பேமெண்ட்ஸ் வங்கி சேவைக்கான அனுமதிகளை வழங்கியதை அடுத்து நாடு முழுவதும் முதன் முறையாகச் சேவையை அளிக்கத் துவங்கி இருப்பது ஏர்டெல் நிறுவனம் மட்டுமே.
பேமெண்ட்ஸ் வங்கிகள்
பேமெண்ட் வங்கிகளைப் பொருத்த வரை நாம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெப்பாசி செய்யலாம், பணத்தை திரும்பப் பெறலாம் ஆனால் கடன் அளிக்க முடியாது.
வங்கிகளில் மேலும் மக்கள் முதலீடு செய்வதற்காகவே இந்த புது மாதிரியான வங்கி சேவைகளை அளிக்க மத்திய அரசு அனுமதிகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகின்றது.
போட்டி நிறுவனங்கள்
ஏர்டெல் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஜியோ, ஐடியா, வோடாபோன் நிறுவனங்களும் பேமெண்டெஸ் வங்கிகளுக்கான அனுமதிகளைப் பெற்றுள்ளன.
கொடாக் மகேந்திர வங்கி
ஏர்டெல் பெமெண்ட் வங்கியில் கணிசமான பங்குகளை கொடாக் மகேந்திர வங்கி வைத்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனம் தங்களது 2,50,000 ரிடெய்ல் மொபைல் ஸ்டோர்களையும் பேமெண்டெஸ் வங்கி சேவைக்காகவும் பயன்படுத்த இருக்கின்றது. மேலும் இப்போது இந்தியாவின் அதிக மொபைல் பயனர்கள் உள்ள நிறுவனமாகவும் ஏர்டெல் இருப்பது குறிப்பிடத்தக்கது.