ஜிஎஸ்டி குறித்த 9 வது கூட்டம் இன்று தோல்வியில் முடிந்தது எனவே ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வர வாய்ப்புள்ளை என்று கூறப்படுகின்றது.
ஆண்டு வருமானம் 1.5 கோடிக்கு உள்பட்ட இருக்கும் போது அதற்கான வரியை மாநில அரசுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் இன்றைய கூட்டம் தோல்வியில் முடிந்தது.
ஜிஎஸ்டி குழுவிற்கான கூட்டத்தைத் தலைமை பொறுப்பு வகித்துள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஜிஎஸ்டி வரி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளை என்றும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரலாம் என்றும் கூறியுள்ளார். அடுத்த கூட்டத்திற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.
புதிய மறைமுக வரி ஆட்சி முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் நிலையில் வரும் பட்ஜெட்டில் இணைக்கத் தேவையில்லை என்றும் ஜெட்லி கூறினார்.
ஜிஎஸ்டி வரி அமலுக்கு வராத நிலையில் வரும் பட்ஜெட்டில் நிறையச் சிக்கல் ஏற்பட்டுள்ளன. இன்றைய ஜிஎஸ்டி கூட்டம் தோல்வி அடைந்ததால் 2017 பட்ஜெட்டில் அரசு என்ன செய்யும் என்று இங்குப் பார்ப்போம்.
நடப்பு வரி ஆட்சி முறை
இப்போது நடைமுறையில் உள்ள வரி ஆட்சி முறையே தொடரும், தற்போதைய வரி அடிப்படையில் வருமான மதிப்பீடுகள் தயாரிக்கப்படும்.
மறைமுக வரி
மறைமுக வரியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யாமல் கட்டமைப்பில் உள்ள விதிவிலக்குகள் மற்றும் பிற சிதைவுகள் மட்டும் நீக்கப்படலாம்.
கலால் வரி மற்றும் சேவை வரி
பட்ஜெட்டில் கலால் வரி மற்றும் சேவை வரி சேர்க்கப்படும். ஜிஎஸ்டி குழு புதிய வரி விகிதத்தை முடிவு செய்த பிறகு மதிப்பீடுகள் திருத்தியமைக்கப்படும்.
ஜிஎஸ்டி வரைவு சட்டம்
ஜிஎஸ்டி வரைவு சட்டத்தின் படி மறைமுக வரியில் அரசு மாற்றம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.