கச்சா எண்ணெய் முதல் டெலிகாம் வரையில் பல துறைகளில் வர்த்தகம் செய்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சந்தைக் கணிப்புகளையும் தாண்டி 10 சதவீத அதிக லாபத்தைப் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் லாபம் உயர்விற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம்.
ரூ.8,022 கோடி லாபம்
அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் லாபம் 8,022 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதேக்காலக்கட்டத்தில் இதன் அளவு 7,296 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கணிப்புகள்
இக்காலாண்டில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் 7,850 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்தைக் கணிப்புகளை உடைந்து ரிலையன்ஸ் ரூ.8,022 கோடி லாபத்தைப் பெற்றுள்ளது.
வருவாய்
இக்குழுமத்தின் வருவாய் அளவு கடந்த வருடத்தை விடவும் 9 சதவீதம் அதிகமாகும். 2016ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 9.8 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளது.
90 சதவீத லாபம் மற்றும் வருவாய்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் மற்றும் லாபத்தில் 90 சதவீதம் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வர்த்தகத்தின் வாயிலாகக் கிடைக்கிறது.
10.8 டாலர்
சுத்திகரிப்பின் மூலம் ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு 10.8 டாலர் லாபம் கிடைப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.