ஆசியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை அமைப்பான பாம்பே பங்குச்சந்தை திங்கட்கிழமை இந்திய முதலீட்டைச் சந்தையில் இறங்க உள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தை 1,243 கோடி ரூபாய் நிதிதிரட்ட உள்ளது.
பிஎஸ்ஈ-யின் ஐபிஓ ஜனவரி 23 பட்டியலிடப்பட்டு முதலீட்டுக்காக ஜனவரி 25ஆம் தேதி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஈ அமைப்பின் ஒரு பங்கு 805 - 806 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதன் வாயிலாக 25ஆம் தேதிக்குள் சுமார் 1,243 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
நாளை பட்டியலிடப்பட்டுள்ள பிஎஸ்ஈ சந்தை வர்த்தகத்திற்காகச் சுமார் 15.43 மில்லியன் பங்குகளை விற்பனைக்காக வெளியிட உள்ளது. இதன் முகமதிப்பு 2 ரூபாயாக உள்ளது.
மேலும் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 18 பங்குகள் மற்றும் 18இன் மடங்குகள் வரை முதலீட்டுச் செய்யலாம், வெள்ளிக்கிழமை ஆங்கர் முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிவித்ததன் மூலம் 373 கோடி ரூபாய் நிதிதிரட்டியுள்ளது.