பல நாட்களுக்குப் பின் திங்கட்கிழமை வர்த்தகம் லாபத்தில் திளைத்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், அமெரிக்காவில் டொடான்டு டிரம்ப் அதிபராகப் பதவியேற்றால் ஆசிய சந்தையில் மாறுபட்ட வர்த்தகச் சூழ்நிலை இந்திய பங்குச்சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
இதன் வாயிலாக இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தக அமைப்பு முதலீட்டாக்காகச் சந்தையில் இறங்க உள்ள நிலையில், புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 82.84 புள்ளிகள் உயர்ந்து 27,117.34 புள்ளிகளை அடைந்துள்ளது. சென்செக்ஸ் குறியீட்டை போலவே இன்றைய வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த நிஃப்டி குறியீடு 42.15 புள்ளிகள் உயர்ந்து 8,391.50 புள்ளிகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, ரிலையன்ஸ், டாக்டர் ரெட்டி, பார்தி ஏர்டெல், என்டிபிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.