சென்னை: ஒரு புதிய ஆராய்ச்சியின் படி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் டிரில்லினியர் ஆக இருப்பார்.
சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஒக்ஸ்பாம் நிறுவனம் செய்ய ஆய்வின் படி, அடுத்த 25 ஆண்டுகளில், பில் கேட்ஸ்க்கு 86 வயதாகும் போகும் போது உலகம் அதன் முதல் டிரில்லினியரை பெற்றிருக்கும்.
டிரில்லினியர்
ஒக்ஸ்பாம் சர்வதேச அமைப்பு கொடுத்துள்ள அறிக்கையின் படி பில் கேட்ஸ்-இன் வளர்ச்சியானது 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 11 சதவீதம் வளர்ந்து வருகிறது , எனவே அவர் விரைவில் உலகின் முதல் டிரில்லினியர் ஆக முடியும் என்று கூறியது.
எத்தனை பூஜ்யங்கள் ?
ஒரு டிரில்லியன் என்றால் - 1000000000000
ஆனால் பில் கேட்ஸ் சொத்துமதிப்போ டாலரில் கடக்கிடப்படுபவை அதனை ரூபாயாக மாற்றும்போது நாம் தலை சுற்றி கீழே விழ வேண்டிய நிலையை ஏற்படலாம்.
முதலிடத்தில் இருப்பது
கேட்ஸ் 2006 ல் மைக்ரோசாப்ட்டை விட்டு போன போது, அவரது நிகரச் சொத்து மதிப்பு ஒக்ஸ்பாம் படி, 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஆனால் 2016-ம் ஆண்டில், அவரது செல்வம் 75 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
அனுமான பகுப்பாய்வுபின் படி, ஒக்ஸ்பாம் ஆராய்ச்சியாளர்கள் பில்கேட்ஸ் அனுபவத்து வரும் அவரின் தற்போதைய வளர்ச்சி விகிதமான 11 சதவீதம் 2009ம் ஆண்டிலிருந்து தற்போதைய நிலை வரை எடுத்து கொண்டனர். (போர்பஸ் அறிக்கையின் படி சுமார் 84 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)
பணக்காரராக இல்லாமல் இருப்பதற்குக் கடின முயற்சி எடுப்பது
"இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் ஏற்கனவே பணக்காரர் என்றால், நீங்கள் மேலும் பெரும் பணக்காரராக மாறாமல் இருப்பதற்குக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும்," என்றும் ஒக்ஸ்பாம் குறிப்பிட்டது.
மற்ற செய்திகளில்
ஒக்ஸ்பாமின் மற்றொரு அறிக்கையின் படி, பில் கேட்ஸ் உட்பட எட்டு பில்லினியர்களின் சொத்து மதிப்பானது, உலகம் முழுவதும் இருந்து 3.6 பில்லியன் ஏழை மக்களின் சொத்து மதிப்புக்கு இணையானது என்று கண்டறியப்பட்டது.
8 பில்லியனர்கள்
இந்த எட்டு பில்லியனர்கள் யார்..
வாரன் பஃபெட், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், இண்டிடெக்ஸ் நிறுவனர் அமனெக்கோ ஒர்டேகா, கார்லோஸ் ஸ்லிம், அமேசான் தலைமை நிர்வாகி ஜெஃ பெஸோஸ், பேஸ்புக் மார்க் ஜுக்கர்பெர்க், முன்னாள் நியூயார்க் அடங்கும் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், மற்றும் ஆரக்கிள் லாரி எலிசன் ஆகியோர் அடங்குவர்.