உலகின் முன்னணி மென்பொருள் தாயரிப்பு நிறுவனமான மைக்ரோசாப்ட், இத்தாலி நாட்டில் புதிய ஒரு அலுவலகத்தைத் திறந்துள்ளது.
பொதுவாக மைக்ரோசாப்ட், கூகிள், பேஸ்புக், ஆரக்கிள் போன்ற பெரு நிறுவனங்களின் அலுவலகம் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும், அலுவலகத்திற்குள்ளேயே, உணவகம், தூங்கும் அறை, விளையாட்டு மைதானம் எனப் பல அம்சங்கள் நிறைந்திருக்கும்.
இந்நிலையில் இத்தாலி நாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை முழுவதும் கண்ணாடிகளாலே கட்டியுள்ளது. இது இத்தாலி நாட்டின் மிலன் நகரில் அமைந்துள்ளது.
மேலும் இந்த அலுவலகத்தில் பாதிக்கும் மேல் இடங்கள் மாணவர்களுக்கும், ஸ்டார்ட்அப் மற்றும் என்ஜிஓ-க்களுக்குப் பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட அலுவலகத்தை யாருக்குத் தான் பார்க்கத் தோன்றாது.. வாங்க பார்ப்போம்..!