மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சேர்ந்து தற்போதைய அதிமுகப் பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோர் முறைகேடாகச் சொத்து சேர்த்த வழக்கில் நான்கு பேருக்கும் இறுதி தீர்ப்பாக உச்ச நீதிமன்றம் 4 வருடச் சிறை தண்டனையுடன் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தற்போது 13 மாத கூடுதல் சிறைவாசம் கிடைக்கப் போகிறதா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அதிமுகக் கட்சியில் பொதுச் செயலாளர் சசிகலா 10 கோடி ரூபாய் அபராத தொகையைச் செலுத்தாவிட்டால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி 4 வருடச் சிறை தண்டனையுடன் 13 மாதங்கள் கூடுதலாகச் சிறை தண்டை அனுபவிக்க வேண்டும்.
சந்தேகம்
இதுவரை சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் செலுத்தாத நிலையில் 13 மாதங்கள் கூடுதலாகச் சிறைத் தண்டனையைப் பெறுவார்களான என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களுரூ
தற்போது சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோர் சிறைவாசம் பெற்று இருக்கும் பெங்களுரூ பரப்பன அக்ரஹாரா சிறை மேலாளர் கிருஷ்ண குமார் 13 மாத கூடுதல் சிறைவாசம் குறித்துத் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
3 வருடம் 11 மாதங்கள்
முறைகேடாகச் சொத்து சேர்த்த வழக்கிற்காக ஏற்தனவே பெங்களுரூ பரப்பன அக்ரஹாரா சிறையில் 21 நாட்கள் சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், இன்னும் 3 வருடம் 11 மாதங்கள் முழுமையாகச் சசிகலா, இளவரசி, சதாகரன் ஆகியோர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.