இந்தியாவின் பணக்காரக் கடவுள் எனப் போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்குத் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சே சந்திரசேகர் ராவ் இன்று 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மாநில அரசின் சார்பாகக் காணிக்கையாகச் செலுத்தினார்.
பிப்.22ஆம் தேதி விமானம் மூலம் திருப்பதி வந்த கேசிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமலையில் இருக்கும் ஏழுமலையான சன்னதியில் சில அமைச்சர்கள் முன்னிலையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
இக்காணிக்கையில், சாலிகிராம் ஆரம், பல அடுக்குகள் கொண்ட தங்க நெக்லஸ் என 19 கோடி எடை கொண்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தினார் எனக் கோவில் நிர்வாகத் தலைவர் சாம்பசிவ ராவ் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.
இந்திய விடுதலைக்குப் பின் ஏழுமலையானுக்கு மாநில அரசு அளித்த காணிக்கையில் இதுவே அதிகப்படியான மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
(புகைப்படம்: எக்னாமிக் டைம்ஸ்)