தமிழ்நாட்டில் ஏரோஸ்பேஸ் பார்க்.. 14 நிறுவனங்களுக்கு தமிழக அரசு நில ஒதுக்கீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழ்நாட்டில் அரசியல் பிரச்சனைகள் பலவற்றுக்கும் மத்தியில் தமிழக அரசு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விமானங்களில் பயன்படுத்தும் உதிரிப்பாகங்களின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செய்யும் ஏரோஸ்பேஸ் பார்க் அமைப்பதற்காகச் சுமார் 14 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.

 

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அட்வான்ஸ் கம்பியூடிங் மற்றும் டிசைன் இன்ஜினியரிங் சென்டரை அமைக்கச் சுமார் 350 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் விமான மற்றும் அதன் உதிரி பாகங்களின் தயாரிப்புத் துறை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி அடையும் இத்தருணத்தில் இந்த 14 நிறுவனங்களுக்கான நிலம் ஒதுக்கீடு முதல் தமிழகத்தில் உற்பத்தி மேலும் வலிமை அடைய உள்ளது.

டிட்கோ

டிட்கோ

தமிழ்நாடு தொழிற்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) தமிழ்நாட்டில் ஏரோஸ்பேஸ் அமைக்க முடிவு செய்து அதற்கான திட்டத்தை அறிமுகம் செய்து. இத்திட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருக்கும் சிப்காட் பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.

14 நிறுவனம்

14 நிறுவனம்

இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 14 நிறுவனங்களுக்குத் தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொலைநோக்கு பார்வை
 

தொலைநோக்கு பார்வை

இத்திட்டத்தின் வாயிலாகத் தமிழகத்தில் ஏரோஸ்பேஸ் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழக அரசு 350 கோடி ரூபாய் முதலீட்டில் அட்வான்ஸ் கம்பியூடிங் மற்றும் டிசைன் இன்ஜினியரிங் சென்டரை அமைக்க முடிவு செய்துள்ளது.

டைடல் பார்க்

டைடல் பார்க்

மேலும் இதே ஏரோஸ்பேஸ் பார்க்கில் டைடல் பார்க் லிமிடெட் 12 ஏக்கர் அளவு கொண்ட இடத்தில் பல அடுக்க மாடி அலுவலகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான கட்டுமான பணிகள் வருகிற ஜூன்-ஜூலை மாதத்திற்குள் துவங்கும் என டைடல் பார்க் நிறுவனம் தெரிவிட்டுள்ளது.

 

20 பில்லியன் டாலர்

20 பில்லியன் டாலர்

மத்திய அரசு பாதுகாப்புக்காகச் செலவிடும் தொகையில் 15-20 சதவீத தொகை ராணுவ விமானங்களுக்காகச் செலவிடப்படுகிறது. இதன் மூலம் இத்தொகையின் அளவு 15-20 பில்லியன் டாலர் வரையில் இருக்கும், இந்நிலையில் விமானத் துறையின் வளர்ச்சிக்குத் தமிழகம் முக்கியப் பங்கு விகிப்பது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தையும் வருவாய் பெற உள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TamilNadu allots land for 14 firms to create aerospace park

TamilNadu allots land for 14 firms to create aerospace park - Tamil Goodreturns
Story first published: Sunday, February 26, 2017, 13:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X