இன்னும் ஒரு வாரத்தில் ஹோலி பண்டிகை வரும் நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் 1,499 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரில் 2017 மார்ச் 12 வரை விமான டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
ஏர் ஏசியாவின் இந்த ஆஃபரில் 2017 ஜூன் 30 வரை பயணம் செய்யலாம். இந்த ஆர்களில் ஹோலி பண்டிகை முதல் பயணம் செய்யலாம்.
வழித்தடங்கள்
1,499 ரூபாய் டிக்கெட் விலையில் ஹைதராபாத்-பெங்களுர் வரை செல்லலாம். மேலும் பூனே, ஸ்ரீநகர் போன்ற வழித்தடங்களிலும் ஆஃபர் விலையில் பயணம் செய்ய முடியும்.
பிற வழித்தடங்கள்
இம்பாலில் இருந்து கவுகாத்தி செல்ல 1,999 ரூபாய் எனவும், பூனேயில் இருந்து ஜெய்ப்பூர் வரை 2,999 எனவும், பூனேவில் இருந்து பெங்களூரு மற்றும் விஷாகபட்டினம் முதல் பெங்களூரு வரை செல்ல 2,399 ரூபாய் விலையிலும் விமானப் பயணம் செய்யலாம்.
பிற நிறுவனங்களில் ஆஃபர்
இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற விமான நிறுவனங்களும் அண்மைக்காலங்களில் பல விதமான அஃபர்களை அறிவித்துள்ளன. இதனால் இந்தியா விமானப் போக்குவரத்தின் டிராப்பிக்கும் அதிகரித்துள்ளது.
ஏர் ஏசியா இந்தியா வெளிநாட்டு விமானப் பயணங்கள்
ஏர் ஏசியா இந்தியா 2017 அறையாண்டு முதல் வெளிநாட்டு விமானச் சேவைகள் வழங்க இருக்கின்றது. இந்த ஆண்டு 14 புதிய விமானங்களையும் 2018 இறுதிக்குள் 6 விமானங்களையும் சேவை அளிக்க வாங்க இருக்கின்றது.