டெல்லி: இந்தியாவில் உருவாக உள்ள 100 ஸ்மார்ட்சிட்டிகளில் இருக்கும் ஏழை மக்களின் வீட்டு வாடகையை மத்திய அரசே ஏற்ற 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு நலத் திட்டத்தை அமல்படுத்த தயாராகி வருகிறது.
இதன் மூலம் மத்திய அரசு பட்டியலிட்டுள்ள 100 ஸ்மார்ட் சிட்டிகளில் இருக்கும் ஏழைக்கள் அதாவது வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் குடியிருப்புகளின் வாடகையை மத்திய அரசே ஏற்க உள்ளது. இதற்காக வாடகை வவுச்சரை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
3 வருட திட்டம்..
இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் குடும்பங்களின் வீட்டு வாடகையை ஏற்றகும் மத்திய அரசின் இப்புதிய திட்டம் முதற்கட்டமாக 3 வருட திட்டமாக அறிவிக்க உள்ளது.
இதன் முதல் வருட திட்டம் 2017-18ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் இல்லை, மத்திய அரசு அறிவிக்க உள்ள 100 ஸ்மார்ட்சிட்டிகளில் இருக்கும் மக்களுக்கும் மட்டுமே.
2,700 கோடி ரூபாய்
இத்திட்டத்தின் ஒரு வருட மதிப்பு மட்டும் 2,713 கோடி ரூபாயாகும். இதன் கீழ் வாடகை வவுச்சர்களை நகர் அமைப்புகள் வழங்கும்.
மேலும் இதன் மூலம் பெரு நகரங்களில் இருக்கும் மக்களின் வறுமையை அடியோடு ஒழிக்க முடியும் என மத்திய அரசு நம்புகிறது.
அதிக வாடகை
வாடகைதாரர்கள் இந்த வவுச்சர்களை வீட்டின் உரிமையாளர்களிடம் அளிக்க வேண்டும். இதனை வீட்டின் உரிமையாளர் ஏந்தொரு குடிமக்கள் சேவை அலுவலகங்களிலும் பணமாக மாற்றிக்கொள்ள முடியும்.
வவுச்சர் மதிப்பிற்கு அதிகமான தொகை வீட்டு வாடகையாக இருந்தால், மீதமுள்ள தொகையை வாடகைதாரர்கள், வீட்டின் உரிமையாளர்களுக்குப் பணமாக அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு இத்திட்டத்தை விவரித்துள்ளது.
வவுச்சர் மதிப்பு
மத்திய அரசு வீட்டு வாடகைக்காக அளிக்கப்படும் வவுச்சர் மதிப்பை நகர அரசு அமைப்புகள் எந்த வகையான வீட்டிற்கு எவ்வளவு தொகை, எந்த நகரம், எந்தப் பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்து மதிப்பிற்கான முடிவை எடுக்கும்.
மேலும் இந்த மதிப்பீட்டில் 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்செஸ் தகவல்கள் முக்கிய இடம்பெற உள்ளது.
வாடகை வீடு
2011இல் பெரு நகரங்களில் 27.5 சதவீதம் குடும்பங்கள் வாடகை வீட்டில் குடி இருப்பதாகச் சென்செஸ் தரவுகள் கூறுகிறது. அதேபோல் 2009ஆம் ஆண்டு இதன் அளவு 35 சதவீதமாக இருந்துள்ளது.