தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்பட்டும் இலவச மடிக்கணினி திட்டத்திற்கும் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் 758 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட படி பெண்களுக்கான ஸ்கூட்டர் திட்டத்திற்கு நிதியமைச்சர் 2017-18 நிதியாண்டு அறிக்கையில் சுமார் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்கல்வி துறைக்கு ரூ.3680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் 2017-18 பட்ஜெட் அறிக்கையில் எவ்விதமான வரி உயர்வும், புதிய வரியும் அறிவிக்கவில்லை.
சரியாக 1.10 மணிக்கு நிதிமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட் தாக்கலை முடிந்தார். வழக்கம்போல் அம்மா துதி பாடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதித்துறைக்கு நன்றி கூறியும் தனது பேச்சு உரை முடித்தார் ஜெயகுமார்.
மேலும் அடுத்தக் கூட்டம் 20.03.2017 திங்கட்கிழமை தொடங்கும் எனச் சபாநாயகர் தனபால் கூறினார்.