அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 339 ரூபாய்க்கு புதிய திட்டத்தை அறிவித்ததுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் தினமும் 2 ஜிபி 3ஜி தரவு மற்றும் வரம்பில்லா அழைப்புகள் போன்றவற்றை அளிக்கின்றது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் பிற நெட்வொர்க்குகளுக்கு தினமும் 25 நிமிடம் இலவச அழைப்புகளும், அதற்குப் பிறகு ஒரு நிமிடத்திற்கு 25 பைசாவும் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அதே நேரம் பிஎஸ்என்எல் அழைப்புகள் முழுவதும் இலவசம். இந்த 2 ஜிபி தரவு தினமும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி மகிழலாம்.இந்த குறைந்த கால சலுகை பிரீபெய்டு வாடிக்கையார்ளுக்கு 90 நாட்களுக்கு மட்ட்மே என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ஆஃபர்
339 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது பிஎஸ்என்எல் நெட்வொர்க் அழைப்புகள் அனைத்தும் இலவசம். அதே நேரம் தினமும் 2ஜிபி வரம்பில்லா தரவை பயன்படுத்தலாம் என்று பிஎஸ்என்எல் வட்டாரங்கள் கூறுகின்றன.
குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை
எங்களது மதிப்புமிகு வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அளிக்க பிஎஸ்என்எல் விரும்புவதாகவும் எனவே சிறந்த ஆஃபர்களை வழங்கி வருவதாகவும் நுகர்வோர் மொபிலிட்டி இயக்குநரக தலைவர் ஆர் கே மிட்டல் தெரிவித்தார்.
ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கை பொருத்த வரை 2017 மார்ச் 31 வரை தினமும் 1 ஜிபி வரம்பில்லா தரவு மற்றும் இலவச குரல் அழைப்புகள் சேவை அளிக்கின்றது. அதற்குப் பிறகு பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 2018 வரை 2 ஜிபி வரம்பில்லா தரவுடன் இலவச அழைப்பு சேவை அளிக்கப்படும். ஆனால் 99 ரூபாஉ ஒரு வருடத்திற்கும், 303 ரூபாய் ஒவ்வொரு மாதமும் கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனமும் மூன்று மாதத்திற்கு 30 ஜிபி தரவை மார்ச் 13-ம் தேதி வரை ஆச்சிர்யமுட்டும் ஆஃபராக வழங்குகின்றது.
பிற நெட்வொர்க்குகள்
பிஎஸ்என்எல் நெட்வொர்க் போன்றே ஜியோ நெட்வோக்கிற்கு போட்டியாகப் பல ஆஃபர்களை வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஐடியா நிறுவனம் விரைவில் தனது பிரீமியம் ஆஃபர் திட்டத்தை வெளியிடும் என்றும் கூறப்படுகின்றது.