மாநிலங்களவையில் உறுப்பினர்கள் உச்ச நீதிமறத்திம் அறிவுறைப்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தின் போது எவ்வளவு சலுகைகள் அளிக்க வேண்டும் என்பதைப் பாராளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அருண் ஜெட்லி கூறினார்.
எனவே அமைச்சர்கள் இப்போது ஓய்விற்குப் பிறகு எவ்வளவு சலுகைகள் பெறுகிறார்கள் என்று இங்குப் பார்ப்போம்.
ஓய்வூதிய நன்மைகள்
முன்னால் எம்பி-க்கு மாதம் 20,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படு. 5 வருடத்திற்கும் கூடுதலாக உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து இருந்தால் மாதம் 1,500 ரூபாய்க் கூடுதலாகக் கிடைக்கும்.
ஒரு வேலை முன்னால் எம்பி ஆக இருந்து இறந்தால் அவரை நம்பி இருந்த மனைவி ஓய்வூதிய தொகையில் இருந்து 50 சதவீத தொகையை ஓய்வூதியமாகப் பெற முடியும்.
பயண நன்மைகள்
முன்னால் அமைச்சராக இருந்த ஒருவர் ரயிலில் பயணிக்கும் போது ஏசி 2 டயர் வகுப்பில் துணையாக ஒருவருடன் பயணிக்கலாம். இதுவே ஏசி முதல் வகுப்பில் தனியாகப் பயணிக்கலாம்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அல்லது லட்சத்தீவுகளில் உள்ள அமைச்சர்கள் ஸ்டீம் படகுகளில் உள்ள உயர் ரக வகுப்பு அறையில் இருந்து பயணம் செய்யலாம்.
சுகாதார நன்மைகள்
அமைச்சர்களாக இருக்கும் போது எந்த மாதிரியான மருத்துவ நன்மைகளைப் பெற்று வந்தார்களோ அதே நன்மைகளை நகரத்தில் வசித்து வரும் அமைச்சர்கள் பெறலாம்.
முன்னாள் எம்.பி. வாழ்க்கைத் துணை அடையாள அட்டை
மாநிலங்களவை செயலகத்தில் கிடைக்கும் பரிந்துரைக்கப்படும் படிவத்தை நிரப்பிய பிறகு முன்னாள் எம்.பி. வாழ்க்கைத் துணை அடையாள அட்டைப் பெற முடியும் PHA மற்றும் PLB நன்மைகளுக்காகப் பெற முடியும்.
விடுதி
உறுப்பினர்களாக இருந்த பிறகு ஓய்வு பெறும் தங்களுக்கு அளிக்கப்பட்ட விடுதியில் ஒரு மாதம் வரை இலவசமாகத் தங்கிக்கொள்ளலாம். அதன் பிறகு தங்குவதற்கு அளிக்கப்பட்ட அனுமதிகள், வாடகை உள்ளிட்டவை அனைத்தும் ரத்துச் செய்யப்படும்.
தொலைப்பேசி வசதி
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது இலவசமாக ஒரு எம்டிஎன்எல் அல்லது பிஎஸ்என்எல் தொலைப்பேசி இணைப்பு வழங்கப்படும். இவர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாள் முதல் இணைப்புத் துண்டிக்கப்படும். அந்தத் தொலைப்பேசி வசதி வேண்டும் என்றால் பொது மக்கள் பெறுவது போன்று பணம் செலுத்தி அதே இணைப்பைக் கட்டணத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.