இந்தியாவில் டெக்னாலஜி மட்டும் அல்லாமல் பல துறைகளில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர்ச்சி அடைத்துள்ளது. ஆனா இந்த விஷயத்தில் மட்டும் அல்ல.
உலகின் டாப் 20 ஸ்டார்ட்அப் நகரங்களில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், பெங்களூரில் இருக்கும் ஊழியர்களின் சம்பளம் தான் மிகவும் குறைவு என்ற அதிர்ச்சி தகவல் தெரிந்துள்ளது.
பெங்களுரூ
2017 குளோபல் ஸ்டார்ட்அப் எக்கோசிஸ்டம் அறிக்கை வெளியானது. இதில் உலகளவில் முக்கியமான ஸ்டார்ட்அப் நகரங்களில் டாப் 20 இடத்தில் இந்தியாவில் இருந்து பெங்களுரூ இடம்பெற்று இருப்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், சம்பளம் அடிப்படையில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
வருடாந்திர சம்பளம்
இந்த ஆய்வில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பள அளிக்கப்படுவது கலிப்போர்னியாவின் சிலிக்கான் வேலி. இங்குச் சராசரியாக ஒருவருக்கு 1,12,000 அமெரிக்க டாலர் சம்பளமாக அளிக்கப்படுகிறது.
பெங்களுரை விடவும் சுமார் 13 மடங்கு அதிகம்.. பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவில் பெங்களுரை நாடி செல்வதற்கும் இதுவே முக்கியக் காரணம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
காரணிகள்
2017 குளோபல் ஸ்டார்ட்அப் எக்கோசிஸ்டம் அறிக்கை, performance, funding, market reach, talent, மற்றும் startup experience என்ற 5 காரணிகளைக் கொண்டு உலகளவில் சிறந்த 20 நகரங்களைப் பட்டியலிட்டுள்ளது.
இதில் 9 நகரங்கள் மேற்கு அமெரிக்காவிலும், 6 ஐரோப்பாவிலும், 5 ஆசியாவிலும் இடம்பெற்றுள்ளது.
சம்பள அளவுகள்
அமெரிக்கா: $ 1,12,000
நியூயார்க்: $ 97,000
லண்டன்: $ 52,000
பெய்ஜிங்: $ 25,000
பாஸ்டன்: $ 95,000
டெல் அவிவ்: $ 63,000
பெர்லின்: $ 55,000
ஷாங்காய்: $ 22,000
லாஸ் ஏஞ்சல்ஸ்: $ 84,000
சியாட்டில்: $ 1,00,000
பாரிஸ்: $ 46,000
சிங்கப்பூர்: $ 35,000
ஆஸ்டின்: $ 82,000
ஸ்டாக்ஹோம்: $ 55,000
வான்கூவர்: $ 55,000
டொராண்டோ-வாட்டர்லூ: $ 56,000
சிட்னி: $ 64,000
சிகாகோ: $ 76,000
ஆம்ஸ்டர்டாம்: $ 45,000
பெங்களூரு: $ 8,600
பெங்களுரூ
மேலும் சம்பள அளவுகளில் பெங்களுரூ கடைசி இடத்தைப் பிடித்திருந்தாலும் இந்நாட்டில் உள்ள திறமையின் அளவு இப்பட்டியலில் டாப் 10 இடத்தில் இருக்கும் நாடுகளுக்கு அணையாகப் போட்டி போடுபவை.
இதன் காரணமாகத்தான் அமெரிக்கா, ஐரோப்பா முதல் உலகின் அனைத்து நாடுகளிலும் இருந்து இந்தியாவிற்கும், இந்தியர்களைப் பணியில் அமர்த்தவும் ஆர்வம் காட்டுகின்றனர்.