மாத சம்பளக்காரர்களுக்கெனப் பிரத்தியேகமாக எளிமையான ஐடிஆர் விண்ணப்பத்தை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி வருமான வரித்துறை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் சில இடங்களில் தகவல்களைக் குறிப்பிடுவதன் மூலம் வருமான வரியை தாக்கல் செய்யலாம்.
வருமான வரி தாக்கல்
அதேபோல், வருமானத்துடன், வட்டி வருமானம் உடையோர் மற்றும் வரி விலக்கு பெற விரும்புவோருக்கான தகவல்களைச் சமர்ப்பிக்கும் தளத்தை ஐடிஆர் 1 என்று அழைக்கப்படும் சாஹாஜ் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் 80சி, மெடிக்கிளைம் 80டி கீழ் வரும் வரி விலக்கு பெறும் குறிப்புகளும் ஐடிஆர் 1 படிவத்தில் உள்ளது.
18 பத்திகள்
புதிய ஐடிஆர் 1/ சாஹாஜ் படிவத்தில் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெற சுமார் 18 பத்திகள் (columns) உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு தனிநபர் எல்ஐசி, பிபிஎப், வீட்டுக்கடனில் திரும்ப அளித்த தொகை எனப் பல பிரிவுகளின் கீழ் சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு வருமான வரி விலக்குப் பெறலாம்.
மேலும் மெடிக்கல் இன்சூரன்ஸ் தவணைக்கான தொகைக்கு 80டி சட்டத்தின் கீழ் வரி விலக்குப் பெறலாம்.
3 பக்க விண்ணப்பம்
ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள வருமான வரி தாக்கல் படிவத்தில், 2 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் செயலற்று கிடக்கும் வங்கி கணக்குகள் குறித்த விபரங்கள் நீக்கப்பட்டு 3 பக்க விண்ணப்பமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 கோடி பேர்
இந்தியாவில் 29 கோடி மக்களிடம் பான் எண் இருந்தாலும், வெறும் 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தி வருகின்றனர்.