இந்திய வர்த்தகச் சந்தையில் கொடிகட்டி பறந்த விஜய் மல்லையா இன்று லண்டன் போய் ஒழிந்துகொண்டு இருக்கிறார் இதற்கு முழுமையான காரணம் அவர் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவனத்திற்கு வங்கிக் கடன் தான்.
இந்தியாவில் இருக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் சுமார் 14,000 கோடி ரூபாய் கடனை வாங்கி இயங்கி வந்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ் மக்கள் மத்தியில் எவ்வளவு ஆஃபர் கொடுத்தலும் பிரபலம் ஆகாத நிலையில் ஊழியர்களின் சம்பளம் முதல் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பு நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் பாக்கி வைத்துவிட்டு 2012ஆம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டார்.
இதன் பின் வங்கிகள் மற்றும் கிங்பிஷர் ஊழியர்களிடம் இருந்து விஜய் மல்லையாவிற்கு மிகப்பெரிய நெருக்கடி கிளம்பிய நிலையில் பெயர் அறியப்படாத தனது கேள்பிரென்ட் உடன் இரவோடு இரவாக லண்டனுக்கு எஸ்கேப் ஆகிவிட்டார். இதன் பின் யாருக்கும் தெரியாத இடத்தில் இருந்துகொண்டு வீடியோ கான்பிரென்சிங் முறையில் தனது நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் நடத்தி வந்தார். மேலும் லண்டனில் இருந்துகொண்ட தனது கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நிறுவனங்களையும் இயங்கி வந்தார். இந்நிலையில் டிவிட்டரில் அவ்வப்போது அவர் குறித்து வெளியாகும் கருத்துக்களுக்குப் பதில் அளித்தும், தனது வக்கில் மூலம் வங்கிகள் மூலம் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தார். இத்தனை நாட்களாகப் பொறுத்துக்கொண்டு இருந்த இந்திய அரசு மற்றும் வங்கிகள், பொறுமையை இழந்த சில நாட்களுக்கு முன் லண்டன் காவல் துறை உதவியுடன் விஜய் மல்லையாவை கைது செய்தனர். என்ன பயன், கைது செய்யப்பட்டு 3 மணிநேரத்தில் பெயில் பெற்றுச் சிறையில் இருந்து வெளியே வந்தார். இவ்வளவு பிரச்சனைகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா யாரிடம் எவ்வளவு கடனை வாங்கியுள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா.? இந்தியாவி மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு 1,600 கோடி ரூபாய் விஜய் மல்லையா செலுத்த வேண்டும். வஜய் மல்லையாவிற்குக் கடன் அளித்து அதனைப் பெற முடியாமல் மிகவும் சிரமப்பட்ட வங்கி என்றால் அது பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகும், இதில் 800 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முபம்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐடிபிஐ வங்கிக்கு 800 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். பாங்க் ஆப் இந்தியாவிற்கு விஜய் மல்லையா 650 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். பாங்க் ஆ பரோடாவில் 550 கோடி ரூபாய் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். யூனைட்டட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு 430 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். யூகோ வங்கியில் விஜய் மல்லையா 320 கோடி ரூபாய் கடனை பெற்றுள்ளார். கர்ப்ரேஷன் வங்கியில் 310 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணை வங்கியாக இருந்த ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரில் 150 கோடி கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் இணைக்கப்பட்டதால் எஸ்பிஐ வங்கியில் இவர் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை 1,750 கோடியாக மாறியுள்ளது. பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கியில் 60 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். ஐஓபி என்று அழைக்கப்படும் இந்தியா ஓவர்சீஸ் வங்கியில் 140 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும். ஃபெடரல் வங்கியில் 90 கோடி ரூபாய் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் 410 கோடி ரூபாய் கடனை திருப்பு செலுத்த வேண்டும். இந்தியாவின் மூன்றாம் பெரிய தனியார் வங்கி நிறுவனமான ஆக்ஸிஸ் வங்கியில் 50 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே கூறிய வங்கிகள் மட்டும் இல்லாமல் மேலும் மூன்று வங்கிகள் 603 கடனை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அளித்துள்ளது. 2011-ம் ஆண்டு எஸ்பிஐ வங்கி கிங்ஃபிஷர் நிறுவனத்திற்கு அளித்த கடனை 60 சதவீதம் வரை பிரீமியம் விலை கொடுத்து வாங்கியதாக மாற்றியது. அன்று 39.90 ரூபாயாக இருந்த பங்கின் விலையை 39.90 ரூபாயாக மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆனது. ஆனால் அடுத்தச் சில மாதங்களில் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளின் விலை மிக மோசமாகக் குறைந்தது. இதைப் பார்க்கும் மொத்தமாகப் பொதுத் துறை வங்கிகள் மட்டும் நன்றாக மாட்டிக் கொண்டது தெரியவந்துள்ளது. உஷார் ஆன ஐசிஐசிஐ வங்கி கிங்பிஷர் ஏர்லைனைஸ் நிறுவனத்திற்கு அளித்த கடனை கொல்கத்தாவைச் சேர்ந்த செரி இன்ஃபார்ஸ்டர்க்சர் நிதி நிறுவனத்திற்கு 2012-ம் ஆண்டு விற்றதன் மூலம் தப்பித்துக்கொண்டது. 2004-ம் ஆண்டு 12 கோடி ரூபாய் நட்டம் அடைந்த கிங்ஃபிஷர்ஏர்லைன்ஸ், 2005-ம் ஆண்டு 20 கோடியும், 2006-ம் ஆண்டு 341 கோடியும், 2007-ம் ஆண்டு 706 கோடியும், 2008-ம் ஆண்டு 213 கோடியும், 2009-ம்ஆண்டு 1,371 கோடி ரூபாயும், 2010-ம் ஆண்டு 1,290 கோடியும், 2011-ம்ஆண்டு 936 கோடியும், 2012-ம் ஆண்டு 2,328 கோடியும், 2013-ம் ஆண்டு 4,301 கோடியும் நட்டத்தைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.லண்டன் பயணம்
விஜய் மல்லையா
டிவிட்டர் மற்றும் வக்கில்
கைது
கடன்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
பஞ்சாப் நேஷனல் வங்கி
ஐடிபிஐ
பாங்க் ஆப் இந்தியா
பாங்க் ஆ பரோடா
யூனைட்டட் பாங்க் ஆப் இந்தியா
யூகோ வங்கி
கார்ப்ரேஷன் வங்கி
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்
பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி
இந்தியா ஓவர்சீஸ் வங்கி
ஃபெடரல் வங்கி
செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
ஆக்ஸிஸ் வங்கி
வங்கிகள்
சிக்கிக் கொண்ட பொதுத் துறை வங்கிகள்
உஷார் ஆன ஐசிஐசிஐ வங்கி
2012-ம் ஆண்டு முதல் தொடர் நட்டம் அடைந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்