டெல்லி மெட்ரோ ரியல் கார்ப்பரேஷன்-க்கு எதிரான வழக்கில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்கு 2,950 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தொகையில் 1,900 கோடி ரூபாயை ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் கடனை தீர்க்கப் பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் கிளை நிறுவனமான டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸிபிரஸ் பிரைவேட் லிமிடெட் (DAMEPL) உடன் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) செய்த ஒப்புந்தம் ரத்துச் செய்யப்பட்ட காரணத்தால் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க DMRC அமைத்த குழு விசாரணையில் மூன்று பேர் கொண்ட குழுவும் DAMEPL நிறுவனத்திற்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது.
இதன் மூலம் ரூ.2,950 கோடி அளவிலான நஷ்டஈடு DAMEPL நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.