ஐபோன் 7க்கு ரூ.16,000 தள்ளுபடி.. பிளிப்கார்ட் பிக் 10 தள்ளுபடி விற்பனையில் அதிரடி..!
நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் வர்த்தக சந்தையில் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை முடித்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் வகையிலும், புதிய வாடிக்கையாளர்களை பெறும் நேக்கத்திலும் 4 நாட்கள் பிக் 10 சேல் என்ற பெயரில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
14ஆம் துவங்கிய இந்த விற்பனை, இன்று புதிய உற்சாகத்தை அடைந்துள்ளது.
பிளிப்கார்ட்
முதல் நாளில் ஆடை மற்றும் வீட்டு பொருட்களை முதன்மையாக கொண்டு அதிகளவிலான தள்ளுபடியை அளித்த பிளிப்கார்ட் நிறுவனம், இன்று தனது முக்கிய வர்த்தக பிரிவான ஸ்மார்ட்போன் மற்றும் எல்கட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது.
ஐபோன்
இன்றைய இளைஞர்களின் கனவாக இருக்கும் ஆப்பில் நிறுவனத்தின் ஐபோனுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்(32 ஜிபி) போனின் விலை 72,000 ரூபாயில் இருந்து 23 சதவீதம் குறைக்கப்பட்டு 54,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 128ஜிபி கொண்ட அதேபோன் 82,000 ரூபாயில் இருந்து 65,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 7 போன் 27 சதவீதம் வரையில் இன்றைய விற்பனையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகிள் பிக்சல்
மேலும் ஐபோன் மற்றும் சந்தையில் இருக்கும் முன்னணி ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக கிளமிறங்கிய கூகிளின் பிக்சல் ஸ்மார்ட்போனின் விலை 67,000 ரூபாயில் இருந்து 53,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
டிவி
ஸ்மார்ட்போன் மொபைல் போன்களை தொடர்ந்து பிளிப்கார்ட் நிறுவனத்தில் இன்று டிவிக்கு பெரிய அளவிலான சலுகையை அறிவித்துள்ளது.
அமேசான்
பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக அமேசான், தனது தள்ளுபடியை முன்பே முடித்துள்ள நிலையில் அதிகளவிலான சலுகையை அறிவித்து, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் திட்டத்துடன் களமிறங்கியுள்ளது பிளிப்கார்ட்.
நஷ்டம்
ஏற்கனவே தள்ளுபடி விற்பனையால் நஷ்டத்தில் தத்தளிக்கும் பிளிப்கார்ட் நிறுவனம் மீண்டும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
எதற்காக இத்தகைய தள்ளுபடி..?
காரணம்
இந்தியாவில் அமேசான் மற்றும் அலிபாபா வருகைக்கு பின் ஈகாமர்ஸ் சந்தையில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. இதனை சமாளிக்கவும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும் பிளிகார்ட் நிறுவனம் இத்தகைய தள்ளுபடி விற்பனையை அறிவித்து வருகிறது.
இதனால் நஷ்டம் ஏற்பட்டாலும் புதிய வாடிக்கையாளர்களை பெறுவது பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு லாபம் என்ற நோக்கில் செயல்படுகிறது.