வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஈபிஎப்ஓ பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தற்போது 20 நாட்களாக நாட்களை உள்ள 10 நாட்களாகக் குறைத்துள்ளது.
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் திட்டத்தில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நாட்களை 45 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்தது.
3 மணி நேரத்தில் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறும் முறை
2017 மே 1 ம் தேதி பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான புதிய முறையை அறிமுகம் செய்த வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெற கோரிக்கை வைக்கும் 3 மணி நேரத்தில் பட்டுவாடா செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
குறைக்கப்பட்ட அதிகபட்ச நாட்கள்
ஈபிஎப்ஓ அமைப்புத் தற்போது அறிமுகம் செய்ய உள்ள இந்த நாட்கள் குறைப்பின் மூலமாக அதிகப் பணிகள் இருக்கும் போது குறைந்தபட்சம் 10 நாட்களிலும், அதிகபட்சம் 15 நாட்களிலும் பிஎப் பணம் பட்டுவாடா செய்யும்.
ஈபிஎப்ஓ குடிமக்கள் சாசனம் 2017
பெங்களூரில் தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தத்ரேயாவால் இன்று திறக்கப்பட்ட ஈபிஎப்ஓ இன் குடிமக்கள் சாசனம் 2017-இல் இந்தப் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய ஈபிஎப்ஓ சாசனங்களின் படி வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்புடைமையுடனும், பிஎப் அப்மைப்புத் திறமையாகக் குறைகளை அறிந்து தீர்த்து வைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது.
ஈபிஎப்ஓ மின்னணு நீதிமன்றம்
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் கீழ் ஈபிஎப்ஓ மின்னணு நீதிமன்றம் சேவை ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இந்தக் காகிதம் இல்லா ஈபிஎப்ஓ மின்னணு நீதிமன்ற சேவை மூலமாக முதலாளிகள், ஊழியர்கள் என அனைவரிடமும் வெளிப்படையாகச் செயல்பட்டு வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள குறைகள் தீர்க்கப்படும்.
மின்னணு நீதிமன்றம் எப்படி அணுகுவது
மேலும், நீதிமன்றத்திதை எளிதில் அணுகுவதற்காக, தானியங்கி பதிவுகள் அவர்களின் பதிவுகளின் எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். பங்குதாரர்கள் ஆன்லைன் தனிப்பட்ட நிகழ்வுகள் மூலமாகக் கண்காணிக்க முடியும் என்றும் ஈபிஎப்ஓ தெரிவித்துள்ளது.