ஐசிஜியில் பாக்கிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் குற்றச்சாட்டுக்குத் தலைமை தாங்கிய ஹரீஷ் சால்வே இன்று நாட்டின் மிக விலையுயர்ந்த வழக்கறிஞர் ஆவார்.
ஆனால் குல்பூஷன் ஜாதவ்வைக் காப்பாற்றுவதற்காகத் தான் 1 ரூபாய் என்ற டோக்கன் கட்டணம் வாங்கிக் கொண்டு வாதாடினார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
இவரது வாடிக்கையாளர்கள் பட்டியலில் உள்ள கோடிஸ்வரர்கள்
இந்தியாவின் கார்ப்பரேட் உலகில் (அம்பானிஸ், மிட்டல்ஸ் மற்றும் பலர்), வோடபோன் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் இவரது சேவையைப் பெறும் வாடிக்கையாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
உலகில் உள்ள பல இந்திய கோடிஸ்வரகள் பிரச்சனைகளுக்கு எல்லாம் பறந்து சென்று வாதாடுபவர் இவர்.
கோடிஸ்வர்கள் முக்கியம் அல்ல
சால்வேவை பொருத்த வரை கோடிஸ்வர்கள் மட்டும் முக்கியம் இல்லை, வழக்குச் சவாலானதாக இருக்க வேண்டும் அது தான் முக்கியம். மேலும், சல்வேவால் ஒருவார் குற்றமற்றவர் அப்பாவி என்று நம்பினால், அவர்களுக்காக இலவசமாகவே வழக்கை வாதாடுவார்.
ஆருஷியின் பெற்றோர்களுக்காகச் சால்வ் வாதிட்டார் - மருத்துவ மகள் அவர்களுடைய மகளைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டினார் - மற்றும் உப்பார் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்காக இவர் வழக்குகளை எடுத்து நடத்தியுள்ளார்.
ஆதார்
தேசிய ஜனநாகக் கூட்டணி அரசு இவரை ஆதார் வழக்கிற்காக உச்சநீதிமன்றத்தில் வாதாட இவரை அணுகியது.
உபர்
அன்மையில் மீறு மற்றும் பிற உள்ளூர், உபர் டாக்ஸி சேவைகளுக்கு இடையிலான வழக்கிலும் உபர் நிறுவனம் சார்பாக இவர் வாதாடினார்.
வாட்ஸ் ஆப்
வருகின்ற ஜூலை மாதம் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள இரண்டு சட்ட கல்லூரி மாணவர்கள் எதிராகவும் இவர் வாதாட உள்ளார்.
ஜெயலலிதா
2014-ம் ஆண்டு ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதானா போது அவர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை வாதாட இவர் பெயர் வழக்கறிஞர்கள் பட்டியலி இடம் பெற்றது. ஆனால் இவர் லண்டனில் இருந்ததால் இந்த வழக்கில் இவரால் பங்குபெற முடியவில்லை.
சல்மான் கான்
காரை ஏற்றி ஒருவரைக் கொன்ற வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட 3 மணிநேரத்திற்குள் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் எப்படிக் கிடைத்தது என்று பலரும் வியந்தார்கள். அதற்குக் காரணமாக இருந்தவரும் இந்த ஹரிஷ் சால்வே தான்.