நிதி சேவைகளுக்கான சேவை வரியை ஜிஎஸ்டி எனப்படும் சேவை வரியின் கீழ் 18 சதவீதமாக உயர்த்த மத்திய ரசு முசிவு செய்துள்ளதால் வங்கி சேவை கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும்.
நிதி சேவைகளுக்கான சேவை வரி இப்போது 15 சதவீதமாக உள்ளது. இப்போது வரி உயர்த்தப்படுவதினால் 100 ரூபாய் மதிப்புக் கொண்ட வங்கி சேவைக்கு 3 ரூபாய் பரிவர்தனை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தனிநபர்களுக்கு அதிகப் பாதிப்பு
நிறுவனங்கள், நிதி நிறுவனங்களுக்கு இந்தப் பரிவர்தனை கட்டணங்கள் பெரிய பாதிப்பாகத் தெரியாது. ஆனால் தன்நபர்களுக்கு இந்தக் கட்டணங்கள் கூடுதலாகச் செலவினத்தை ஏற்படுத்தும்.
4 வரி விகிதங்கள்
மத்திய அரசு 1211 பொருட்களுக்கு 5%, 12%, 18% மற்றும் 28% வரி வைகப்படுத்தியுள்ளதை அடுத்து பால், முட்டை, புதிய பழங்கள், காய்கறிகள், புதிய இறைச்சி, மீன், கோழி, முத்திரைகள், நீதித் தாள்கள், அச்சிடப்பட்ட புத்தகங்கள், செய்தித்தாள்கள், போன்றவற்றிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
18 சதவீத வரி
18 சதவீத வரியின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, சோளப்பொறிகள், ரொட்டி மற்றும் கேக்குகள், பாதுகாக்கப்பட்ட காய்கறிகள், நெரிசல்கள், சுவையூட்டிகள், சூப்கள், ஐஸ்கிரீம், உடனடி உணவு கலவைகள், கனிம நீர், திசுக்கள், உறைகள், குறிப்பேடுகள் முதலியன வருகின்றன.
காப்பீடு திட்டங்கள்
காப்பீடு திட்டங்களில் காப்பீட்டுப் பிரீமியங்கள் பாலிசியின் கட்டமைப்பைப் பொறுத்து, எவ்வளவு பிரீமியம் ஆபத்து என்று வகைப்படுத்தப்பட்டு முதலீடுகளைப் பொத்து வரி விகிதம் மாறும்.
வங்கிகள்
வங்கிகளும் தங்களது அனைத்து வங்கி கிளைகளையும் ஜிஎஸ்டி வரியின் கீழ் பதிவு செய்ய வேண்டும், தற்போது வங்கி கிளைகள் அனைத்துத் தங்களது தலைமை அலுவலகம் கீழ் இயங்கினாலும் பதிவு செய்தல் கட்டாயம். இதனால் வங்கிகளுக்குக் கூடுதல் செலவு அதிகரிக்கும்.