ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தது ஊழியர்கள் தரப்பிலும், நிறுவன தரப்பிலும் தலா 12 சதவீத பணத்தை EPS, EPF மற்றும் EDLI திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.
இந்த அளவீட்டை ஒய்வூதிய அமைப்பான EPFO 10 சதவீதமாகக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான இறுதி முடிவு நாளை முடிவு செய்யப்பட உள்ளது.
இந்த 10 சதவீதம் என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ கீழ் அளிக்கப்படும் பணத்தில் படிக்கப்படுவது.
12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுவதன் மூலம் ஊழியர்களுக்கு அதிகமான பணம் கையில் கிடைக்கும் இதன் மூலம் அதிகளவில் செலவு செய்யமுடியும். இது நாட்டின் வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம் EPFO அமைப்பிற்குப் பிரிந்துரை செய்துள்ளது.
ஆனால் இதற்கான இறுதி முடிவை EPFO அமைப்பு தான் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாற்றத்தினால் ஊழியர்களின் வரியில்லா வருமானத்தின் அளவு குறைந்து, கூடுதல் வரி செலுத்த வேண்டி வரலாம்.