பிராவிடென்ட் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஊழியர்களும், ஊழியர்களுக்கு வேலை அளித்த நிறுவனங்களும் ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ தொகையில் 12 சதவீதம் பிஎப் கணக்கிற்கு வைப்புச் செய்வது வழக்கம்.
இந்த அளவீட்டை 12 சதவீதத்தில் இருந்து 10 சவீதமாகக் குறைக்க மத்திய தொழிலாளர் அமைச்சகம் பிரிந்துரை செய்த நிலையில், அதற்கான ஆலோசனை சனிக்கிழமை நடைபெற்றது.
EPFO அமைப்பு
ஓய்வூதிய அமைப்பான EPFO அமைப்பு மத்திய அரசின் பரிந்துரையை ஆய்வு செய்து முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆசோசனை குழுவில் பங்குபெற்ற அனைத்து உயர் நிர்வாகக் குழு அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
12 சதவீத பங்கீட்டு
இதன் மூலம் 12 சதவீத பங்கீட்டு அளவு தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் ஈபிஎப்ஓ அமைப்பு அறிவித்துள்ளது.
மறுப்பு
தற்போதைய நிலையில் அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய் இருக்கும் அனைவருக்கும் பிஎ பங்கீட்டிற்குப் பணம் செலுத்த வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. இதன் அளவை 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்னும் மத்திய அரசின் பரிந்துரைக்கும் ஆய்வு செய்து மறுப்பு தெரிவித்துள்ளது.
முக்கிய அமைப்புகள்
மேலும் மத்திய அரசின் பரிந்துரையை CII மற்றும் FICCI அமைப்புகளும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.11.50 லட்சம் கோடி
EPFO அமைப்பின் கீழ் தற்போது சுமார் 4.2 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். மேலும் இந்த அமைப்பு சுமார் 11.50 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒவ்வொரு வருடமும் கையாண்டு வருகிறது.