நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா-வின் பதவி நீட்டிப்புக் காலம் வருகிற அக்டோபர் 6ஆம் தேதியுடன் முடிவடையும் காரணத்தால், இவ்வங்கிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கு முழுவீச்சில் இறங்கியுள்ளது மத்திய நிதியமைச்சகம்.
இதுகுறித்து மத்திய நிதியியல் சேவைத் துறை, வங்கி வாரியத்திற்கு அனுப்பிய அறிக்கையில், இந்த வருடம் முடிவிற்குள் பொதுத்துறை வங்கியில் காலியாக இருக்கும் முக்கியப் பதவிகள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது என நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமாக எஸ்பிஐ வங்கியில் தலைவர் பதிவியைக் குறிப்பிட்டுள்ளது நிதியியவ் சேவைத் துறை. எஸ்பிஐ வங்கி இந்திய வங்கித்துறையில் சுமார் 20 சதவீத சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
வருகிற அக்டோபர் 6ஆம் தேதியன்று அருந்ததி பட்டாச்சார்யா தனது 4 ஆண்டுக்கால நீட்டிக்கப்பட்ட பதிவி காலம் முடிவடைகிறது. எஸ்பிஐ வங்கி சேர்மேன் தாண்டி நான்கு முக்கியத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இதில் அருந்ததி பட்டாச்சார்யா தற்போது சேர்மேன் பதவியில் இருக்கிறார்.