இந்திய பங்குச்சந்தையும் பொருளாதாரமும், வெளிநாட்டுச் சந்தைகளை அதிகம் நம்பி இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில் வெளிநாட்டுச் சந்தைகள் அனைத்தும் அமெரிக்கச் சந்தையின் முடிவுகளின் ஆதிக்கம் அதிகம் கொண்டிருக்கும் காரணத்தால் அமெரிக்காவின் முடிவுகள் இந்திய சந்தையையும் பாதிக்கும்.
உதாரணமாக அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை 1 சதவீதம் உயர்த்தினால் கூட, உலகில் இருக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் அமெரிக்க முதலீட்டுப் பத்திரத்தில் தான் முதலீடு செய்வார்கள். இதனால் உலக நாடுகளில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சரிவு, தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு எனப் பல மாற்றங்கள் ஏற்படும்.
இத்தகைய வட்டி விகித மாற்றங்களை முடிவு செய்வதையே அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி செய்கிறது. இதற்காக ஒரு ஆண்டுக்கு 8 முறை நாணய கொள்கை ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது பெடர்ல் ரிசர்வ்.
இந்திய ரிசர்வ் வங்கியை விடவும் 2 முறை அதிகமாக நாணய கொள்கை கூட்டத்தை நடத்துகிறது அமெரிக்கா. இதன் பிடி 2017ஆம் ஆண்டின் திட்டம் என்ன..?
முதல் கூட்டம்: ஜனவரி/ பிப்ரவரி: 31-1ஆம் தேதி
2வது கூட்டம்: மார்ச் 14-15
3வது கூட்டம்: மே 2-3
4வது கூட்டம்: ஜூன் 13-14
5வது கூட்டம்: ஜூலை 25-26
6வது கூட்டம்: செப்டம்பர் 19-20
7வது கூட்டம்: அக்டோபர்/நவம்பர் 31-1
8வது கூட்டம்: டிசம்பர் 12-13