ஜிஎஸ்டி கவுன்சில் நடத்திய முக்கியக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வருமானங்கள் மற்றும் அவர்களுக்கான விதிமுறைகளுக்கு அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் அனைத்து மாநிலங்களும் ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி அமலாக்கம் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்படி மத்திய அரசு திட்டமிட்டபடி ஜூலை 1ஆம் தேதி முதல் இந்திய வர்த்தகச் சந்தையில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது.
கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் 1,200 சரக்குகளையும், 500 சேவைகளையும் 5,12,18,28 சதவீத வரி விதிப்பில் பிரித்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் துவங்கிய ஜிஎஸ்டி கவுன்சில்-இன் 15வது கூட்டம் நடந்தது. இதில் தங்கம், டெக்ஸ்டைல்ஸ், காலாணி என மொத்தம் 6 பொருட்களுக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இதுகுறித்து விபரத்தை தெரிந்துகொள்ள.