ஆர்பிஐ வங்கியின் 6 நபர்கள் கொண்ட இரண்டாவது நாணய கொள்கை கூட்டம் உர்ஜித் படேல் தலைமையில் செவாய்க்கிழமை முதல் நடைப்பெற்று வந்தது.
கூட்டத்தின் முடிவில் குறைந்த கால கடன் வட்டி விகிதம் எனப்படும் ரெபோ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் 6.25 சதவீதமாகவே தொடர்கின்றது என்று அறிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் மற்றும் வங்கியில் குவிந்துக்கிடக்கும் அதிகளவிலான பணம் இருக்கும் காரணத்தால் பண புழக்கும் சிறப்பாக இருக்கும் இத்தகைய சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் MPC அமைப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் அறிவிக்கை வில்லை.
எஸ்எல்ஆர் விகிதம் 0.50% குறைத்து 20 சதவீதமாக அறிவித்துள்ளது. பெரும்பாலான ஆய்வாளர்கள், பருவமழை விளைவு, ஜிஎஸ்டி சுழற்சியின் பாதிப்பு மற்றும் சில முக்கிய பொருளாதார குறிகாட்டிகள் ஆகியவற்றின் மீதான அதிக தெளிவுக்காக காத்திருந்தனர் என ஆய்வாளர்கள் நம்பியிருந்தனர்.
பங்குச் சந்தை
நாணய கொள்கை ஐவிப்பில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற அறிவித்த பின்பு சென்செக்ஸ் பிளாட்டாவே உள்ளது.