இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஜூன் 16 முதல் தினமும் மாற இருக்கும் நிலையில் ஐரோப்பாவின் மூன்றாம் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான பிபி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடையில் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் துறைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எர்பொருட்களில் குறைந்த கார்பன் சக்தி கொண்டதாக மாற்ற இந்த ஒப்பந்தம் உதவும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
எண்ணெய் வயல்
எண்ணெய் வயல்கள் குத்தகைக்கான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 40,000 கோடி ரூபாய் ஆகும்.
ஒப்பந்தங்கள்
கேஜி-டி6 பிளாக் வளர்ச்சிக்கான குத்தகை ஒப்பந்தம்.
குறைந்த கார்பன் கொண்ட சக்தி
இந்தியாவிற்கான மாற்று எரிபொருள் மற்றும் குறைந்த கார்பன் கொண்ட எரி பொருள் வணிகத்திற்கான திட்டம்.
ஒத்துழைப்பு
பிற்காலத்தில் தொடங்கப்படும் திட்டங்களில் ஒத்துழைப்பை விரிவாக்க வாய்ப்புள்ளது.
ரீடெய்ல்
ரீடெய்ல் பரிவுக்கான பணிகளைச் செய்யும்.
ஷெல்
இந்தியாவில் ஷெல் நிறுவனத்தைக் கொண்டு எண்ணெய் கிணறுகளுக்கான ஆராய்ச்சியை முகேஷ் அம்பானியின் தந்தை செய்ததும், அந்த நிறுவனத்துடன் இணைந்து பல பெட்ரோலியம் திட்டங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.