நாட்டின் முன்னணி ஈகாரமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பெங்களுரை தலைமையாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்கிறது. இந்நிலையில் பெங்களுரூ வாசிகளின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் டிராப்க்-ஐ சீர்ப்படுத்த ஐடியாக்களைப் பெறும் கிர்ட்லாக் ஹேகத்தான் என்ற போட்டியை பிளிப்காரட் நடத்துகிறது.
இந்தப் போட்டிக்காகப் பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களுக்கு இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
கிர்ட்லாக் ஹேகத்தான்
இந்தக் கிர்ட்லாக் ஹேகத்தான் போட்டிக்குப் பிளிப்கார்ட் சகப்போட்டியாளரான அமேசான் நிறுவனக்தையும் அழைத்துள்ளது. ஏற்கனவே வாய்க்கா தகராறு...
இந்நிலையில் அமேசான் இப்போட்டியில் கலந்துக்கொள்ளவது குறித்து எவ்விதமான அறிவிப்பையும் தெரிவிக்கவில்லை.
ரவி கார்கிபாட்டி
இந்த அழைப்பை பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான ரவி கார்கிபாட்டி, அமேசான் நிறுவனத்திற்கு மட்டுமல்லாமல் மைக்ரோசாப்ட், பல முன்னணி முதலீட்டு நிறுவனங்கள், விப்ரோ, இன்போசிஸ், சிஸ்கோ ஆகிய நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார்.
பெங்களூரு டிராப்பிக்
பெங்களூருவில் நாளுக்கு நாள் மிக மோசமாக டிராப்பிக் அதிகரித்து வருகின்றது. இதனை முறையாகத் திட்டமிட்டு தீர்க்க வேண்டும். சிறந்த தொழில்நுட்பம் அல்லது தீர்க்க சிறந்த வழி ஒன்று வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
பரிசு
சிறந்த தீர்வு அளிக்கும் நபருக்கு அல்லது குழுவிற்கு 2 லட்சம், 1 லட்சம் மற்றும் 50,000 ரூபாய் என மூன்று பரிசுகள் அளிக்கப்படும். இந்தப் பரிசு தொகை அனைத்தும் பிளிப்கார்ட் கூப்பனாக அளிக்கப்படும்.
பிக் 10
இந்தப் போட்டி பிளிப்கார்ட் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழாவாக நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.