வரா கடன் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினை அடுத்து வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரொக்கப் பணங்களால் கடன் வளர்ச்சி சரிவை சந்தித்தது.
எனவே பொது மக்கள் டெபாசிட் செய்த தொகை என்ன ஆனது இந்திய பொருளாதாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இங்குப் பார்ப்போம்.
கிரெடிட்-டெபாசிட் விகிதம்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவின் படி கிரெடிட்-டெபாசிட் விகிதம் மே மாதம் இறுதியில் 7 சதவீதமாக உள்ளது. அப்படியானால் நாம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 72 ரூபாய் வங்கிக் கடனிற்கும் மீதம் உள்ள தொகை அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும்.
ஒரு வருடத்திற்கும் முன்பு என்ன நிலை
சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு வங்கிகள் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 76 ரூபாயினைக் கடனாகவும் மீத தொகையினைப் பத்திரங்களும் முதலீடு செய்து வந்தன. இந்தக் கணக்கு ஒவ்வொரு மாத இறுதியிலும் வங்கிகளில் எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தது ஆகும்.
எப்போது கடன் மீதான டெபாசிட் அதிகரிக்கும்
வங்கி கணக்கில் எந்த அளவிற்கு டெபாசிட் செய்யப்படுகின்றதோ அந்த அளவிற்குப் புதிதாகக் கடன் மீதான டெபாசிட் அதிகரிக்கும். இதனால் 2016-2017 நிதி ஆண்டின் கிரெடிட் வளர்ச்சி பெறும் அளவில் மாற்றத்தை சந்தித்துள்ளது.
லாபம் குறைவு
மார்ச் மாதம் இறுதியில் 42 சதவீதமாக இருந்த கிரெடிட் மீதான டெபாசிட் இருந்த போது 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகை பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டது. இவை குறைந்த அளவு லாபம் அளிக்கும் திட்டங்கள் ஆகும்.
பண மதிப்பு நீக்கம்
பண மதிப்பு நீக்கப்பட்டதின் போது அதிகப்படியான ரூபாய் வங்கி கணக்கில் இருந்தது. அதனால் வங்கிகள் பத்திரங்களை வாங்குவதைக் குறைத்து ஆர்பிஐ வங்கிக்குக் கடனை செலுத்துவதில் கவனம் செலுத்தினர். அதுமட்டும் இல்லாமல் நவம்பர் மாதம் 1 சதவீதமாகவும் கிரெடிட் மீதான டெபாசிட் விகிதம் குறைந்து இருந்தது. டிசம்பர் மாதம் 13 சதவீதமாக உயர்ந்தது.
இப்போது வங்கிகள் என்ன செய்கின்றன?
சென்ற மாதம் 72 சதவீதமாகக் கிரெடிட் மீதான டெபாசிட் விகிதம் உயர்ந்ததை அடுத்து 72 ரூபாய் கடன் செலுத்துவதில் 17 ரூபாய் தனிநபர் கடனிற்கும்,, சேவைகளுக்கும், 28 ரூபாய் தொழிற்சாலைகள் கட்டுதல் மற்றும் நடத்துவது, 10 ரூபாய் மட்டும் விவசாயத்திற்கும் செல்கின்றது.
அது மட்டும் இல்லாமல் வங்கிகளில் டெப்பாடிட் செய்யப்படும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 25 ரூபாயினை வீட்டுக் கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்காக வங்கிகள் ஒதுக்குகின்றன.
வங்கிகளால் சுமக்கப்படும் கடன்களின் நச்சுத் தன்மை என்ன?
ஒவ்வொரு 72 ரூபாயிலும் 14 ரூபாய்ப் பாரமாக அதாவது வருமான இல்லாத பணமாக அல்லது கடன் வாங்கியவர்களால் ஏற்படும் தமதத்திற்கான செலவாக வங்கிகள் பார்க்கப்படுகின்றன.