பொதுத் துறை வங்கி லாக்கரில் வைக்கும் மதிப்பு மிக்கப் பொருட்கள் காணாமல் போனால் அதற்கு வங்கி சார்பாக எந்த இழப்பீடும் கிடைக்காது என்று தகவல் வெளிவந்துள்ளது.
இந்தக் கசப்பான உன்மை ஆடிஐ மூலமாக ஆர்பிஐ வங்கி மற்றும் 19 பொதுத் துறை வங்கிகளிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு வந்த பதில் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
இந்த வெளிப்பாட்டின் காரணமாக, வெளிப்படையான சட்டத்தின் கீழ் தகவல் பெற விரும்பிய வக்கீல் இப்போது லாக்கர் சேவையைப் பொறுத்தவரையில் வங்கிகளின் ஒரு பாதுகாப்பு இல்லாத ஏமாற்று சேவையை இந்திய காம்பெட்டிஷன் ஆணையத்தின் மூலம் வெளிவந்துள்ளது.
ஆர்பிஐ அளித்த பதில்
ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆர்பிஐ அளித்த பதிலில் வங்கி லாக்கர் தொடர்பாக எந்தவொரு குறிப்பிட்ட சட்டங்களும், விதிகளும் இல்லை பொதுத்துறை வங்கிகளும் எந்தவொரு பொறுப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
19 வங்கிகள்
பாங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ மற்றும் கனரா உட்பட 19 வங்கிகளால் வழங்கப்பட்ட பதிலில், "வாடிக்கையாளர்களுடன் வங்கிகள் கொண்டுள்ள உறவு" லாக்கர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு இடியலானது ஆகும்.
குத்தகைக்குத் தான் லாக்கர் அளிக்கப்படுகின்றது
அப்படியானால் லாக்கரினை வாடகைக்குப் பயன்படுத்தும் அல்லது குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் தான் பொறுப்பு என்பது ஆகும்.
வாடிக்கையாளர்களின் சொந்த ரிஸ்க்
சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் அளிக்கும் போது அதில் உள்ள பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பு இல்லை என்றும் களவு, போர் போன்ற எந்தக் காரணங்களினால் பொருட்கள் சேதம் அடைந்தாலும் வாடிக்கையாளர்களின் சொந்த ரிஸ்க் தான் என்ற பத்திரத்தில் கையெழுத்திடப்பட்ட பிறகு தான் லாக்கர் அளிக்கப்படுகின்றது.
காப்பீடு
அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது பொருட்களை ஏன் வீட்டிலேயே வைத்துக்கொண்டு காப்பீடு செய்துவிடக் கூடாது என்கிறார் வழக்கறிஞர் குஷ் கல்ரா.
கார்டெல்
எஸ்பிஐ, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி எனப் பிற வங்கிகளும் அத்தகைய சிக்கலுக்கு எதிராகப் போராட நடைமுறைகளில் ஈடுபடுவதற்கு "கார்டெல்" என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
மேலும் இந்த அமைப்பின் மூலம் வங்கிகள் தங்களது சேவைக்குக் கடுமையான விதிகளை விதிக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.